Pages

Tuesday, March 8, 2011

நிகழ்வுகள் - 2011

நிகழ்வு - 19

8வது திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் 2011 பிப் 28 ஜனவரி 7 வரை தொடர்ந்து 10 நாட்கள் பல் வேறு உலகப் படங்கள் திரையிடப்பட்டன. புத்தகக் கண்காட்சி வளாகத்தின் மேல் தளத்தில் செயல்பட்ட நம் அரங்கத்திற்கு பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.
வலைதளங்களில் உலகத் திரைப்படங்கள் குறித்து எழுதி வரும் திரு முரளி மற்றும் ராமன் போன்றோர் வந்திருந்து பங்களிப்புச் செய்தனர். வரும் காலங்களில் நம்மோடு இணைந்து பணியாற்ற ஆர்வம் தெரிவித்தனர். அவர்களை உளமாற வரவேற்போம்.
உலகத் திரைப்பட ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் பொருட்டு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. 40 புதிய ஆர்வலர்கள் செய்தி அனுப்பித் தங்கள் பெயர்களைப் பதிந்து கொண்டார்கள்.

நிகழ்வு - 20

13-02-2011 அன்று

இலக்கிய அமர்வு நடைபெற்றது. முதலாவதாக கனவு வெளியீடான ‘பருத்திக்காடு’ சிறுகதைத் தொகுப்பு அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்து உலகத் திரைப்படம் திரையிடப்பட்டது. பிங்கேற்பாளர்கள் குறைந்த அளவே வந்திருந்தார்கள். நிகழ்வை மேலும் வலுவாக்க வந்திருந்தவர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. தகவல் தொடர்பில் அனைவரும் முனைப்போடு பங்கெடுக்க முடிவு செய்யப்பட்டது. உலகத் திரைப்படத் திரையிடல்களுக்கான வரவேற்பை அனைத்துப் பங்கேற்பாளர்களும் முன் வைத்தனர்/

No comments: