Pages

Friday, March 11, 2011









இப்படத்திற்கான கவிதைகள் கீழே தொடர்கின்றன. கவிதை அனுப்பிய நண்பர்களுக்கு நன்றிகள்...




ஆட்கொள்ளும் ஆபத்து

மீண்டும்

எதிர்பார்த்த சந்தை
இன்னும் சில நாளில்...

எபபடியாகினும் உங்கள் பலவீனங்களை
தூசி தட்டி எடுத்து முந்திக்கொண்டு
முகவரியாக்கி வைப்பீர்கள் என்ற
அசைக்க முடியாத நம்பிக்கையுடன்
முற்றுகையிடத் தயாராகிறர்கள்
சில வியாபா¡¢கள்.
இப்படியொரு வியாபாரத்தை
உலகம் இதுவரை கண்டிராத பிரமிப்புடன்
கவர்ச்சி விளம்பரங்களை கட்டவிழ்க்கும்
வியாபாரத் தந்திரங்களை நீங்கள்
வெகுவாக வரவேற்கிற வரையில்
சந்தை கலை கட்டாதா என்ன?
எந்தச் சிந்தனைத் திசையிலும்
உங்களை வெளியேற்றிட விடாது
இலவசத்திற்குள் கட்டிப்போட்டிருக்கும்
வியாபாரிகள் காரிசனத்துடன் வருகிறார்கள்
உங்கள் பேராசைக்குத் தீணியாய்
கரன்சிகளை திணிப்பத்ற்காக.
சமுதாயப் படுகொலை நஞ்சை
வழங்க வரும் அவர்கள்முன் இனியும்
அடிபணிந்து விடாமல்
எதிர்கால சமுதாயத்தை பாதுகாக்கும்
கடமை உயிரோட்டமாய் உள்ளதை
விலைபோகும் முன் உணருங்கள்.
சரித்திரத்தை மாற்றும் சக்தி
வலிமையான மனச்சாட்சியிடம் உள்ளது
நாகரிக அரக்கனான
கரன்சிகளில் இல்லை சிந்தியுங்கள்

- இரத்தினமூர்த்தி - 9344201063

கொட்டும்

அளவுக்கு அதிகமாகக்

கொட்டினால் நிச்சயம்

கொட்டும் தேளாய் பணம்.

-கா.சுப்ரமணியம், ஓய்வு தலைமை ஆசிரியர் திருப்பூர்.

Tuesday, March 8, 2011

நிகழ்வுகள் - முன்னறிவிப்பு - தேதி மாற்றப்பட்டது

வணக்கம் நண்பர்களே வரும் 13-03-2001 அன்று நமது அடுத்த நிகழ்வு நடைபெற உள்ளது. அனைவரும் வருக. இதோ அழைப்பிதழ்...

அழைப்பிதழில் இடம் பெற்றிருக்கும் படத்திற்கான கவிதையோடு நிகழ்விற்கு வாருங்கள் நண்பர்களே...

நிகழ்விற்கு வர இயலாதவர்கள் தங்கள் கவிதையை மின்னஞ்சலில் அனுப்பலாம். தேர்வாகும் கவிதை அன்றைய நிகழ்வில் உங்கள் சார்பாக வாசிக்கப்படும், இவ்வலைப் பூவிலும் வெளியிடப்படும்.

இது போன்ற கருத்துப்படங்கள் வரவேற்கப்படுகின்றன. அடுத்தடுத்து வரும் அழைப்பிதழ்களில் ஓவியர் பெயரோடு இடம் பெறும். ஆர்வமுள்ளவர்கள் அனுப்பவும்.

முக்கிய அறிவிப்பு-

நண்பர்களே சில தவிர்க்க முடியாத காரணகளால் 13-3-2011 அன்று நடைபெற இருந்த இந்நிகழ்வு வரும் 17-4-2011 அன்று மாலை 6 மணிக்கு மாற்றம் செய்யப்படுகிறது. சிரமத்திற்கு வருந்துகிறோம்.

நிகழ்வுகள் - 2011

நிகழ்வு - 19

8வது திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் 2011 பிப் 28 ஜனவரி 7 வரை தொடர்ந்து 10 நாட்கள் பல் வேறு உலகப் படங்கள் திரையிடப்பட்டன. புத்தகக் கண்காட்சி வளாகத்தின் மேல் தளத்தில் செயல்பட்ட நம் அரங்கத்திற்கு பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.
வலைதளங்களில் உலகத் திரைப்படங்கள் குறித்து எழுதி வரும் திரு முரளி மற்றும் ராமன் போன்றோர் வந்திருந்து பங்களிப்புச் செய்தனர். வரும் காலங்களில் நம்மோடு இணைந்து பணியாற்ற ஆர்வம் தெரிவித்தனர். அவர்களை உளமாற வரவேற்போம்.
உலகத் திரைப்பட ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் பொருட்டு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. 40 புதிய ஆர்வலர்கள் செய்தி அனுப்பித் தங்கள் பெயர்களைப் பதிந்து கொண்டார்கள்.

நிகழ்வு - 20

13-02-2011 அன்று

இலக்கிய அமர்வு நடைபெற்றது. முதலாவதாக கனவு வெளியீடான ‘பருத்திக்காடு’ சிறுகதைத் தொகுப்பு அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்து உலகத் திரைப்படம் திரையிடப்பட்டது. பிங்கேற்பாளர்கள் குறைந்த அளவே வந்திருந்தார்கள். நிகழ்வை மேலும் வலுவாக்க வந்திருந்தவர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. தகவல் தொடர்பில் அனைவரும் முனைப்போடு பங்கெடுக்க முடிவு செய்யப்பட்டது. உலகத் திரைப்படத் திரையிடல்களுக்கான வரவேற்பை அனைத்துப் பங்கேற்பாளர்களும் முன் வைத்தனர்/