Pages

Showing posts with label 13-3-2011 படத்திற்கான கவிதை. Show all posts
Showing posts with label 13-3-2011 படத்திற்கான கவிதை. Show all posts

Friday, March 11, 2011









இப்படத்திற்கான கவிதைகள் கீழே தொடர்கின்றன. கவிதை அனுப்பிய நண்பர்களுக்கு நன்றிகள்...




ஆட்கொள்ளும் ஆபத்து

மீண்டும்

எதிர்பார்த்த சந்தை
இன்னும் சில நாளில்...

எபபடியாகினும் உங்கள் பலவீனங்களை
தூசி தட்டி எடுத்து முந்திக்கொண்டு
முகவரியாக்கி வைப்பீர்கள் என்ற
அசைக்க முடியாத நம்பிக்கையுடன்
முற்றுகையிடத் தயாராகிறர்கள்
சில வியாபா¡¢கள்.
இப்படியொரு வியாபாரத்தை
உலகம் இதுவரை கண்டிராத பிரமிப்புடன்
கவர்ச்சி விளம்பரங்களை கட்டவிழ்க்கும்
வியாபாரத் தந்திரங்களை நீங்கள்
வெகுவாக வரவேற்கிற வரையில்
சந்தை கலை கட்டாதா என்ன?
எந்தச் சிந்தனைத் திசையிலும்
உங்களை வெளியேற்றிட விடாது
இலவசத்திற்குள் கட்டிப்போட்டிருக்கும்
வியாபாரிகள் காரிசனத்துடன் வருகிறார்கள்
உங்கள் பேராசைக்குத் தீணியாய்
கரன்சிகளை திணிப்பத்ற்காக.
சமுதாயப் படுகொலை நஞ்சை
வழங்க வரும் அவர்கள்முன் இனியும்
அடிபணிந்து விடாமல்
எதிர்கால சமுதாயத்தை பாதுகாக்கும்
கடமை உயிரோட்டமாய் உள்ளதை
விலைபோகும் முன் உணருங்கள்.
சரித்திரத்தை மாற்றும் சக்தி
வலிமையான மனச்சாட்சியிடம் உள்ளது
நாகரிக அரக்கனான
கரன்சிகளில் இல்லை சிந்தியுங்கள்

- இரத்தினமூர்த்தி - 9344201063

கொட்டும்

அளவுக்கு அதிகமாகக்

கொட்டினால் நிச்சயம்

கொட்டும் தேளாய் பணம்.

-கா.சுப்ரமணியம், ஓய்வு தலைமை ஆசிரியர் திருப்பூர்.